ஒவ்வோர் வருடமும்
ஒவ்வோர் மைல் கல்
திசைகளைச்
சரிபார்த்துக் கொள்வோம்.
இலட்சியத்தை
இலக்கங்களில் நிர்ணயிக்காமல்
இயக்கங்களில் நிர்ணயிக்கவும்,
பதவிகளை நோக்கிய
பயணத்தை விடுத்து
உதவிகளை நோக்கிய
பயணம் தொடுக்கவும்,
வீழ்த்துதல் வெறி
தணித்து
வாழ்த்துதல் நெறி
வளர்க்கவும்,
ஆனந்தத்தின் எல்லைகளை
ஆசைகளின்
ஆடைகளால் போர்த்தாமல்,
நேசத்தின் தொடுதல்களால்
வார்த்தெடுக்கவும்,
மனிதம் நோக்கிய
பயணமே
புனிதம் தேக்கிய பயணம்
என்பதை உணரவும்,
இந்த புத்தாண்டு
புரிதல் விரிக்கட்டும்.
மாலை நேரக் கடற்கரையில்
கிளிஞ்சல் பொறுக்கும்
கவலைகளற்ற சிறகுகளுடன்
சிரிக்கும் சிறுவன் போல,
புத்தாண்டு நம்மைப் புதுப்பிக்கட்டும்
இனிய
நல்வாழ்த்துக்கள்.
Fantastic kavithai.
Nenjathai allum ennimaiyum karuthukkal thavalum kavithai.
LikeLike
Simply superb!!!
LikeLike
Nalla kavidhai, unarchigalum ullamum urchagathil thilaikka,
indhe puthandau sirappaga amaya, unaglin varthaigal ookuvikkipadhai irukindrnae, nandri nandri nandri.
LikeLike
Very good..as you said, we need to be like a kid always, who does not have any worries…………
LikeLike