நாட்டில் எங்கும்
திண்ணைகளில்லாத வீடுகள்.
திண்ணை குறித்த
நினைவுகளுக்காக
புகைப்படமெடுக்கும் ஆர்வத்தில்
என்
கிராமக் கரையில் ஒதுங்கினேன்.
அங்கும்
திண்ணைகளின் மேல்
முளைக்க விட்டிருக்கிறார்கள்
இரும்புக் கம்பிகளை.
பாதுகாப்பு குறித்த
பயங்களின் பிராண்டல்களில்
தொலைந்து கொண்டிருக்கின்றன.
திண்ணைகள்.
பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
பனையேறும் தாத்தாக்களும்
டிஷ்களிளுக்குத் தாவியபின்
தனியே இருந்தாலும்
என்ன தான் செய்யும்
திண்ணைகள்
ஃ
சில கிராமங்களில் இன்னமும் இருக்கின்றன திண்ணைகளும்,திண்ணைப்பேச்சுக்களும்.இருந்தாலும் பாட்டிகளும்,தாத்தாக்களும் தொலைக்காட்சியிலும்,அலைபேசியிலும் “கொலவெறி”கொண்டு அலைவதும் சுடுகின்ற யதார்த்தம் தான்.
LikeLike
//சிறப்பான சிந்தனை
பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
பனையேறும் தாத்தாக்களும்
டிஷ்களிளுக்குத் தாவியபின்
தனியே இருந்தாலும்
என்ன தான் செய்யும்
திண்ணைகள்
//
நன்றி ராச கணேசன்
LikeLike
சிறப்பான சிந்தனை
பாக்கு இடிக்கும் பாட்டிகளும்
பனையேறும் தாத்தாக்களும்
டிஷ்களிளுக்குத் தாவியபின்
தனியே இருந்தாலும்
என்ன தான் செய்யும்
திண்ணைகள்
LikeLike
மிக்க நன்றி ஷாமா 🙂
LikeLike
சந்திப்பின் அரங்கம் (திண்ணை)…
துயில்கொள்ளும் மஞ்சம் (திண்ணை)….
இன்று எம்மைச்
சிந்திக்க வைத்து விட்டது!
LikeLike
நன்றி குழந்தை நிலா ஹேமா, 🙂 எல்லாம் இப்போது கனவுகளிலும், நினைவுகளிலும் 🙂
LikeLike
நன்றி விஜய்
LikeLike
திண்ணைகளற்ற வீடுகள்
திணைகளற்ற காடுகள்
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
LikeLike
எங்க வீட்லயும் தலையணை வச்ச கட்டில்போல ஒரு செம்மண்ணால கட்டின திண்ணை இருந்தது !
LikeLike