கமல்…
( நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை…. )
எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.
தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.
அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.
நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.
அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.
தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.
இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.
நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் இவன்.
உரக்கப் பேசியே
பழகிய திரையுலகை
விழிகளால் பேசியே
விழ வைத்தவன் இவன்.
இவன்
ஐந்தில் வளைந்ததால்
ஐம்பதிலும் நிமிர்ந்து
நிற்பவன்.
மயிலே மயிலே
என்றால்
இவனுக்காய்
இறகு போடக் காத்திருக்கும்
இதயங்கள் ஏராளம்.
இவன் வாழ்வில்
அடிக்கும்
ஒவ்வோர் அலையும்
பூவையர் இதயங்களில்
புயல் சேதத்தை விளைவிக்கிறதாம்.
அரிதார இளைஞர்களுக்கு
அரிதாகவே கிடைக்கும்
அவதாரம் இவன்.
விருதுகள் இவன்
தலையிலமர்ந்து
கர்வப்பட்டன.
ஓட்டத்தில் எப்போதுமே
தோற்றுப் போகும்
ஆஸ்கர் மட்டும் அவமானப்பட்டது.
ஃ
Oscar is amrican proudct.But kamal are Indian prouduct,so no need osacr to kamal.proud to be an indian
ஓகே பிரகாஷ்..
LikeLike
Oscar is amrican proudct.But kamal are Indian prouduct,so no need osacr to kamal.proud to be an indian.
LikeLike
🙂
LikeLike
தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.
LikeLike
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி செந்தில்…
LikeLike
Nice I was totally impressed with your poetic penned about My Favorite The LIVING LEGEND The UNIVERSAL STAR Kamal hassan. I shall Oblige my comment here : As everyone I too liked your lines about kamalji..but you portrait kamalji as an actor only but rather he is Living comradeship, I expect something more about his Leadership in Society, a role model for youngster ” Even veezhvaan yena ninaithayo”
LikeLike
/நன்று நன்று நண்பா நல்வாழ்த்துகள்//
மிக்க நன்றி ஐயா…
LikeLike
அன்பின் சேவியர்
உலக நாயகனைப் பற்றிய அருமையான கவிதை
நடிப்பினைப் பார்த்துப் பிரமித்த நடிகர்களின் நடுவில் நடிப்பு இவ்னைப் பார்த்து பிரமித்தது
கருவினிலேயே நடிப்பு பயின்ற அபிமன்யு
கண்ணாடியில் ஒவ்வொரு நொடியிலும் புது பிம்பம்
நிழல் ஒவ்வொண்றும் ஒரு விதம்
அழச் சொன்னால் அடுத்டஹ் நொடியில் கண் அணை திறப்பவன்
விழிகளால் பேசுபவன்
ஐந்தில் வளைந்து அம்பதில் நிமிர்ந்து நிற்பவன்
ஆஸ்கார் – தேவை இல்லை இவனுக்கு
நன்று நன்று நண்பா நல்வாழ்த்துகள்
LikeLike
//உவமானம், உவமேயம், கவித்துவம் நிறைந்தவை கவிதையாகலாம் .. “மனித நேயம்” அற்றவர்களைவிட எல்லோருமே உயர்ந்தவர்கள் என்பதால் நீங்கள் தாராளமாக எல்லோரையும் பற்றிக் கவிதை வடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!…//
கலக்கிட்டீங்க போங்க….
LikeLike
உவமானம், உவமேயம், கவித்துவம் நிறைந்தவை கவிதையாகலாம் .. “மனித நேயம்” அற்றவர்களைவிட எல்லோருமே உயர்ந்தவர்கள் என்பதால் நீங்கள் தாராளமாக எல்லோரையும் பற்றிக் கவிதை வடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!…
//நடிப்பு இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது//
//எல்லோரும் நடிப்புச் சாளரங்களை எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு இவன் வீட்டைத் தான் எட்டிப் பார்த்து பிரமித்தது.//
//நெருப்பு என்றால் வாய் வேகாது என்பர்.
பொய்.
அழு என்றால் அடுத்த வினாடி கண்”அணை” திறப்பவன் இவன்.//
//விழிகளால் பேசியே விழ வைத்தவன் இவன்//
என்னே உண்மை வரிகள்!
ஆஸ்கருக்கே ஆஸ்காரா?….
அதனால் தானோ என்னவோ….
சிகரத்தின் சிரம்தனில் ஏறியமர
ஆஸ்காரால் முடியவில்லை போலும்!
வளரட்டும் கவிப்பயணம்!…. வாழ்த்துகள்!!!!
LikeLike
நன்றி ஹேமா 🙂
LikeLike
//SUPERB FOR KAMAL//
நன்றி நண்பரே
LikeLike
நன்றி யாழ் அகத்தியன்…
LikeLike
வருகைக்கு நன்றி உமா 🙂
LikeLike
nice.one day that award come to his hand.
LikeLike
nice
LikeLike
SUPERB FOR KAMAL
LikeLike
அருமையாய் கமலின் நினவோடு நனைய வைதீர்கள் ஒரு நொடி.அண்ணா கவலைப்படத் தேவையில்லை.ஆஸ்கார் ஒருநேரம் கமலைப் பார்த்து அவமானப்படும் பாருங்கள்.
LikeLike