சார்.. என்னை தேனாம்பேட்டை வரை லிப்ட் தர முடியுமா ?
காரை வழிமறித்துக் கேட்ட சிறுவனின் கண்களில் இருந்த கபடமின்மை என்னை கட்டிப் போட்டது. கதவைத் திறந்து விட்டேன். முன் இருக்கையில் வந்து அமர்ந்து புன்னகைத்தான்.
யாரு தம்பி நீ ? இங்கே சைதாப்பேட்டையிலே தான் தங்கியிருக்கிறாயா ? தேனாம்பேட்டையில் வேலை பார்க்கிறாயா ?
காரை மெல்ல ஓட்டிக் கொண்டே கேட்டேன் நான்.
நான் கடவுள். சிறுவன் சொன்னான். நான் சிரித்தேன்.
கடவுள் ந்னு உனக்கு பேரு வெச்சிருக்காங்களா ? புன்னகைத்துக் கொண்டே கேட்டேன்.
கடவுள் என்னுடைய பெயர் கிடையாது. என்னுடைய அடையாளம். சிறுவனின் பதில் தெளிவாக வந்து விழ நான் குழம்பினேன். ஒருவேளை மூளை சரியில்லாத பையனோ ? என்ன கேட்கப் போகிறான். தேனாம்பேட்டையில் இறங்கிவிடுவானா ? ஒருவேளை மக்கள் கூட்டத்தில் இறங்கி நின்று அப்பா என்று அழைத்துவிட்டால் மக்கள் என்னை சந்தேகப் படுவார்களே ! ஏதேனும் சிக்கலில் மாட்ட வைக்கப் போகிறானோ ? ஏண்டா இவனை ஏற்றினோம் என்றானது எனக்கு.
ஏன் இத்தனை கேள்விகள் மனதில் ? நம்பிக்கையில்லாத உலகில் வாழ்ந்து வாழ்ந்து உங்களுக்கு யாரையுமே நம்ப முடியாமல் போய் விட்டது. யாராவது பாராட்டினால் கூட எதையோ எதிர்பார்த்து தான் பாராட்டுகிறான் என்று நினைக்கிறீர்கள். சிறுவன் சிரிக்க எனக்குத் தலை சுற்றியது.
‘இ..இல்லை.. கடவுள் இத்தனை சின்னவராய் இருக்கிறாரே….என்று’ நான் உளறினேன்.
ம்.. புரிகிறது என் தலை நரைக்கவில்லையே என்று தானே சந்தேகப்படுகிறாய்?
கடவுளுக்குத் தான் வயதே கிடையாதே. இந்த உண்மையை அறிந்து கொள்ளாத மனிதர்கள் தான் என்னை தலைநரைத்த கிழவனாகவோ, இல்லையேல் திடகாத்திர இளைஞனாகவோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவன் சிரித்தான்.
எனக்கு ஏசி காரின் குளிர்ச்சியையும் மீறி உள்ளங்கையில் வியர்வை நதி விருட்டென்று கிளம்பியது. கால்கள் பிரேக்கின் மேல் நடுங்கிக் கொண்டிருந்தன. காலை ஒன்பது மணி போக்குவரத்து நெரிசல் என் கண்முன்னால் திடீரென மங்கத் துவங்கியது.
பயப்படாதே. கடவுள் சொன்னார்.
அவ்வளவுதான் வினாடி நேரத்தில் என்னுடைய கைகளின் வியர்வை காணாமல் போயிருந்தது. கால்கள் இயல்புக்கு வந்தன. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவன் கடவுள் தான் போலிருக்கிறது, மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அடுத்த வினாடியே, இருக்காது என்றது மனது.
அது என்ன ? எல்லோரும் கடவுளை நோக்கி வேண்டுகிறீர்கள். கடவுளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் நேரில் வந்து நான் தான் கடவுள் என்றால் நம்ப மறுக்கிறீர்கள், அல்லது பயந்து நடுங்குகிறீர்கள். கடவுள் கேட்டார்.
அப்படியில்லை கடவுளே. உயரத்துல இருந்தாதான் கடவுளுக்கே மரியாதை. தொட முடியாத தூரத்துல இருக்கிறதனால தானே சூரியனுக்கு மரியாதை, வீதிக்குள்ள வந்துட்டா ? சொல்லிவிட்டு சிறுவனைப் பார்த்தேன். இன்னும் எனக்குள் கேள்விகள் தீர்ந்தபாடில்லை. சீக்கிரம் தேனாம்பேட்டை சென்று சேர்ந்து இவனை இறக்கி விட்டு விட வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டே காரை ஓட்டினேன்.
‘பொறம்போக்கு…. ‘ சட்டென்று என் காரின் முன்னால் சைக்கிளில் குறுக்கே பாய்ந்த மனிதனை நோக்கித் திட்டினேன். திட்டிய வேகத்தில் நாக்கைக் கடித்தேன்.
ஸாரி… கடவுளே. நீங்க இருக்கிற ஞாபகம் இல்லாம திட்டிட்டேன்.
‘நான் தான் எப்போவும் இருக்கேனே… ‘ சிறுவன் சொல்ல நான் திகைத்தேன். என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் அமைதியானேன்.
‘உனக்குக் கார் தந்திருக்கிறேன் நான். அவனுக்கு சைக்கிள் தான் தந்திருக்கிறேன். என்னுடைய திட்டப்படி நீ அவனைப் பாதுகாக்க வேண்டும். நீ அவனைத் திட்டுகிறாய். உன் காரை ஒரு இருசக்கர வாகனம் தாண்டிப் போனாலே எரிச்சல் படுகிறாய். அவனை விரட்டுகிறாய். நீ காரோட்டும் சுகத்தை அனுபவி. அவன் தாண்டிப் போகும் அந்த சின்ன சந்தோசத்தைக் கூட காணக் கூடாது என்று நினைக்கலாமா ?’ கடவுள் கேட்க நான் உறைந்தேன்.
அப்படியல்ல… இந்த இருசக்கர வாகனம், ஆட்டோ எல்லாம் தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம். நாம இந்த சைதாப்பேட்டை தாண்டி, நந்தனம் தேனாம்பேட்டை போய் சேர்வதற்கு அரைமணி நேரமாகும் பாருங்களேன்.
சரி.. சாலையில் வாகனங்களே இல்லாமல் இருந்தால் எவ்வளவு நேரமாகும் ?
பத்தே நிமிடம் தான். நான் சொன்னேன்.
சரி.. இருபது நிமிடம் அதிகம் அவ்வளவு தானே ஆகட்டுமே. என்ன ஆகிவிடப் போகிறது ? எனக்குத் தெரிந்தவரை இந்த இருபது நிமிட நேரம் உன்னுடைய வாழ்க்கையை ஒன்றும் புரட்டிப் போடப் போவதில்லையே. கடவுள் சொல்ல நான் மீண்டும் நிலைகுலைந்தேன்.
எல்லாருமே அவரவர் கடமைகளை உணர்ந்து நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால் யாருமே செய்வதில்லை. மீறுவதற்காகவே படைக்கப்பட்டது தான் சாலை விதிகள் என்பது போல போகிறீர்கள். மஞ்சள் விளக்கு போட்டவுடன் காரை நிறுத்தினால் கொலைக்குற்றம் செய்து விட்டது போல திட்டித் தீர்க்கிறீர்கள். அதாவது வீதிகளில் விதிகளைக் கடைபிடிப்பவனை மதிகேடனாகப் பார்க்கிறீர்கள். மொத்தத்தில் நீங்கள் சரியாக நடப்பதில்லை. சரியாய் நடப்பவனை மனிதனாக மதிப்பதும் இல்லை. சரிதானே ? கடவுள் கேட்க நான் வாயடைத்துப் போனேன்.
அப்படியல்ல… அவரவர் கவலை அவரவர்க்கு.. அதான் வேகமாக ஓடுகிறார்கள்.
நீ மீண்டும் மீண்டும் தவறுகளை நியாயப் படுத்தத் தான் பார்க்கிறாய். வரிசையில் நிற்காமல் கவுண்டருக்குள் கையை இடித்து நுழைக்கிறாய், ரயில்வே கேட் மூடியபின்னும் இருசக்கர வாகனத்தை சரித்து நுழைக்கிறாய்… எத்தனை எத்தனை மீறுதல்கள். எல்லாமே உங்களுக்குப் பழகி விட்டது. எல்லாமே மாமூல் வாழ்க்கை ஆகி விட்டது. எது தவறு எது சரி என்று வித்தியாசம் தெரியாத அளவுக்குத் தவறுகள் உங்களுக்குப் பரிச்சயம் ஆகிவிட்டன. பரிச்சயமானது எல்லாம் சரி என்று தோன்றுகிறது உங்களுக்கு. கடவுள் சொல்லச் சொல்ல எனக்கு மீண்டும் வியர்க்கத் துவங்கியது.
கடவுளே. இதெல்லாம் வாழ்க்கையில் பகுதிகள். கடவுள் வந்து கவலைப்படக் கூடிய அளவுக்கு இதில் ஏதும் இல்லையே ?
அப்படியில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் நீ சரியாக நடக்கும்போது பெரிய விஷயங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். சின்னச் சின்ன எண்களின் கூட்டுத் தொகை தானே பெரிய இலக்க எண் ? கடவுள் தொடர்ந்தார். எல்லோருக்குள்ளேயும் கடவுள் இருக்கிறார். நீங்கள் கடவுளைக் காண்பதற்காகத் தான் அலைகிறீர்களே தவிர கடவுளைக் காட்ட வேண்டுமென்று நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.
சிக்னலில் வண்டியை நிறுத்திக் கொண்டே தலையாட்டினேன் நான். இவர் உண்மையிலேயே கடவுள் தானோ ? ஒருவேளை என்னைத் தண்டிப்பதற்காக வந்திருக்கிறாரோ ? மனசுக்குள் ஒரு பய அலை புரண்டது.
அப்போது பின்னால் நான்கைந்து வண்டிகள் தாண்டி ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அவசர ஒலியுடன் வந்து நின்றது. அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலிடையே காற்று நுழைவதே கடினமாய் இருந்த காலைப் பொழுது. ஆம்புலன்ஸ் வண்டி பின்னால் வந்து ஒலியெழுப்பிக் கொண்டே நின்றது. யாரும் எங்கும் நகர முடியாத நிலை. சிக்னல் போட்டு வண்டி கிளம்பினால் தான் கொஞ்சமாவது ஓரம் கட்ட முடியும். உள்ளே எந்த அவசர நிலையில் யார் இருக்கிறார்களோ மனது அடித்துக் கொண்டது. அமெரிக்காவிலெல்லாம் சாலையில் கடைசியில் ஒரு லேன் அவசர வண்டிகளுக்காகவே வைத்திருப்பார்கள். எத்தனை பெரிய போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அந்த வரிசையில் யாரும் வாகனத்தை ஓட்டமாட்டார்கள். எனவே அங்கெல்லாம் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் நிற்கவேண்டிய அவசியமே இருப்பதில்லை. எனக்குள் நினைவுகள் சுழன்றபோது கடவுள் கூப்பிட்டார்.
பார். இந்த ஆம்புலன்ஸ் நகராமல் இருப்பதற்குக் கூட ஒரு வகையில் நீங்க எல்லோரும் காரணம் தான். எல்லோரும் அவரவர்க்குரிய வரிசையில் சாலையில் நின்றிருந்தால் இந்த ஆம்புலன்ஸ் தாமதமில்லாமல் போய் சேர்ந்திருக்கும். இப்போது பார். அந்த வண்டியில் இருக்கும் பெண் இறப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது.
‘அ..அந்த வண்டியில் இருப்பது பெண்ணா ? அ..அவளுக்கென்ன ?’ எனக்கு தூக்கிவாரிப் போட்டது. குரல் நடுங்கியது.
அவள் ஒரு மனிதாபம் மிக்க கடவுள் பக்தை. எப்போதும் மக்களுக்கு நன்மை செய்வதைப் பற்றியே சிந்திப்பவள். இப்போது கூட சேரி மக்களிடம் பணியாற்றிவிட்டு வரும் வழியில் தண்ணி லாரி மோதிவிட்டது.
‘ஐயோ… கடவுளே. நீங்கள் இங்கே இருக்கிறீர்களே. நீங்கள் நினைத்தால் அவளைக் காப்பாற்ற முடியும் இல்லையா ?’
நான் அவளைக் காப்பாற்ற வரவில்லை. அழைத்துப் போக வந்திருக்கிறேன்.
‘அ…அழைத்துப் போகவா ?’ எனக்கு நாக்கு குழறியது
ஆம். அவள் நல்ல செயல்கள் பல செய்திருக்கிறாள். அதனால் தான் அவளை அழைத்துப் போக நானே வந்திருக்கிறேன். கடவுள் சொன்னார்.
ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த அந்தப் பெண் ஏராளமான இரத்தத்தைச் சிந்தி மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
என் வண்டி தேனாம்பேட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது.
நன்றி அருண்குமார்…
LikeLike
I like very much this Story, Realy touching in my heart, is very nice hearlty welcome.
By
Arunkumar A
MAPYDSK Group of Friends
LikeLike
/Submitted on வ/மா/தி at 1:17பிற்பகல்
oh…very very superb…really nice… i enjoyed…
plz mail me more like this.
with love and regds.
vijaykumar muthusamy.
//
மிக்க நன்றி விஜய்…
LikeLike
oh…very very superb…really nice… i enjoyed…
plz mail me more like this.
with love and regds.
vijaykumar muthusamy.
LikeLike
நன்றி சந்திரன்.
LikeLike
veryvery nice and all of think of them
LikeLike
//And don’t you think that I’m also a God who is giving the real praises to you ??!!//
நீங்க கடவுள் தான்னு நினைக்கிறேன் 🙂
ஏன்னா உங்க சிந்தனைகள் தூய்மையா இருக்கு, மனம் திறந்து பேசறீங்க, பாராட்டறீங்க… நன்றி..
அடிக்கடி வாங்க…
LikeLike
Hello Mr.Xavier ,
U are doing a Great Job !!
Trying to bring the awareness of the Discipline of the heart through DIVINE factor in the common man……which is depleting day by day !!
Very glad to read ur short story woven intricately with the great intention !!
Keep up the good work !!
God Bless you !!
P.S: If God is there in everybody , don’t you think that you are a God who is writing this ?
And don’t you think that I’m also a God who is giving the real praises to you ??!!
Smiles…..
LikeLike
மிக்க நன்றி சுந்தர்.
LikeLike
இது கதையல்ல நிஜம்! அருமையான கருத்து!.
படிக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும். உலகம்
கேட்டுபோக நாமும் ஒரு காரணமே!
அகவே நம்மால் முடிந்த அளவு முயற்சி
செய்து விதிமுறைகளையும் சட்டங்களையும்
பின்பற்ற வேண்டும்
LikeLike
mika nalla sinthanai…
LikeLike
நன்றி சுரேஷ்
LikeLike
கடவுள்.,
உணர்ந்தவற்குள்.,
பெருக்கும்
நல்வழி ஆற்றல்.
LikeLike
நன்றி Manee !
LikeLike
Superb.!
LikeLike
simply super
LikeLike
//நீங்கள் கடவுளைக் காண்பதற்காகத் தான் அலைகிறீர்களே தவிர கடவுளைக் காட்ட வேண்டுமென்று நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.//
ஒரு சிறந்த குறும்படத்துக்கான கதை. இதை விட எளிமையாய் யாராலும் தர முடியாது. நான் படித்ததில் மிகச் சிறந்ததாய் இதை என்னால் தைரியமாய் சொல்ல முடியும்.
சென்ஷி
LikeLike
Hi Xavier, Yosikka vaitha kadhai..Karuthazham adhigam. ‘Anniyan’ padam patha madiri oru feeling. Yaaro namadhu manasatchiyai vulukuvadhu pola irundadhu. Idhai padithu, rende rendu per saalai vidigalai kadaipidithaalum, adhu indha kathaiku kidaitha vetri. Good One 🙂
Rgds,
KP
LikeLike
i read your visually and poetically excellent poems in the colourful e pages in your blog. my best wishes to you. thanks.
LikeLike
எதுவும் சொல்லிட்டுப் போகலியா கடவுள்?
படிச்சுப் பார்த்தேன். கொஞ்சம் பயமாவும்… உங்க கதை. கொஞ்சம் பயமாவும்… ஒரு வரியில சொல்லணும்னா … இங்கே பாருங்க.
LikeLike
வித்தியாசமான சிந்தனை; சில வரிகள் கூடுதலாக பிரகாசிக்கின்றன; வாழ்த்துக்கள்;
LikeLike
Pingback: Thenkoodu - Tamiloviam Contest : September - Konjam Lift Kidaikkumaa « Bala’s Blog
good one.
http://thakaval.wordpress.com
LikeLike
nalla kadhai, nalla karuthum irukirathu.
vaazhthukkal
LikeLike