கவிதை : கடவுளின் குழப்பம்

விறகு உலர்த்திக் கொண்டே
அம்மா
மழை வரக்கூடாதே
என்றும்,

நடவு முடித்த மாமா
கொஞ்சமாய்
தூறலேனும் விழட்டுமே என்றும்.

ஒரே கடவுளிடம்
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்
தனித் தனியாய்.

நான் கடவுளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
வெறுமனே.

 

2 comments on “கவிதை : கடவுளின் குழப்பம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.