தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்

இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ?

ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை !

இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில் குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கின்றனர்.

இப்படிச் சாவது வலியற்ற சாவு. இப்படிச் சாக செய்யவேண்டியவை இவை, தற்கொலைக்குத் தேவையான இந்தப் பொருட்கள் இந்த இடங்களில் கிடைக்கின்றன. இந்த முறையில் சாக நினைப்பது உசிதம் ஏனெனில் சில மணி நேரங்களில் இறந்து விடலாம்.

இப்படி ஏராளமான அதிர்ச்சியூட்டும் வழிமுறைகள் தற்கொலையை உற்சாகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நான் விளக்க விரும்பாத அந்த வழிமுறைகளில், திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிய தற்கொலை வழிகள் முதல் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி நவீன முறைகள் வரை உள்ளன என்பது பகீர் பயங்கரம்.

“நன்றி… இது தான் என் விலாசம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்.” சொல்லி விட்டு விடைபெறுகிறான் ஒரு பதின் வயது இளைஞன். கடமையில் கருத்தாய் இருப்பதாய் கருதிக் கொண்டு செத்துப் போகிறான்.

எல்லோரும் அவனை உற்சாகமாய் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு உயிர் அநியாயமாய் செத்துப் போகிறது. அதன் பின்னணியில் எழும் ஒரு குடும்பத்தின் அழுகுரலைப் பற்றிய எந்த விதமான உறுத்தலும் இன்றி விவாதம் தொடர்கிறது.

“நான் தனியா தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். யாராவது சேர்ந்து தற்கொலை செய்யலாம் வருகிறீர்களா?”  அழைப்பு விடப்படுகிறது. உடனே உற்சாகமாக கும்பல் சேர்ந்து விடுகிறது.

அந்த கும்பல் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ குவிகின்றனர். தங்களுக்குள்ளாகவே எப்படிச் சாவது ? எங்கே சாவது ? எப்போது சாவது என பேசி முடிவெடுக்கின்றனர்.

அனைவரும் கை கோர்த்துக் கொள்கிறார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதெல்லாம் பரபரப்பூட்டும் திரைக்கதையோ, நாவலோ அல்ல. அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் உள்ளம் பதறுகிறது அல்லவா?

உலகெங்கும் இத்தகைய இணைய தளங்கள் தற்கொலை விரும்பிகளால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் மட்டும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இணைய தளங்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறுப்பினராக இருக்கும் பல இணணய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் பலரை தற்கொலைக்கு வழியனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றன.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், யாரேனும் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகச் சொன்னால் உடனே தற்கொலையே தீர்வு என பலர் அறிவுரை செய்கின்றனர்.
யாரும், தற்கொலை செய்ய வேண்டாம் என்றோ, அது தவறு என்றோ சொல்வதே இல்லை. எப்போதேனும் எழும் சிறு சிறு குரல்களும் வெளிவராமல் அடங்கிவிடுகிறது.

தற்கொலை செய்வதா ? வேண்டாமா எனும் மனநிலையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் இத்தகைய தளங்களில் வந்தால் செத்துப் போவது உறுதி என்கின்றனர்.

சுமார் பதினொன்று முதல் இருபத்து ஐந்து வரையிலான வயதினரே இத்தகைய தளங்களில் இணைந்து விவாதிக்கின்றனர். இத்தகைய இணைய தளங்களின் கொடிய விளைவாக ரஷ்யாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் இருபது பதின் வயதினர் தற்கொலை செய்து கொள்கின்றனர், மிக மிக மகிழ்ச்சியுடன்.

இந்தத் தளங்களில் இணைபவர்களில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை இதில் பதிவு செய்கின்றனர்.

இப்படிப்பட்ட தளங்கள் வேறு விதமான முகமூடி அணிந்து நல்ல பிள்ளையாய் காட்சியளிப்பதால் இதை தடை செய்யும் வழியும் தெரியாமல் விழிக்கின்றனர்.

பதின் வயது துடிப்புடனும், உற்சாகத்துடனும் செலவிட வேண்டிய வயது. இந்த வயதில் தற்கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஏன் இவர்களுக்கு வருகிறது என்பதற்கு உளவியலார் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.

முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பதின் வயதுக் காதல். அவனோ, அவளோ இல்லையேல் வாழ்க்கை இல்லை என நினைக்கும் முட்டாள்தனமான பாலியல் ஈர்ப்புகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இத்தகைய வசீகர வலையில் சிக்கி தற்கொலையே தீர்வு என முடிவெடுத்து விடுகின்றனர். 

இரண்டாவதாக பெற்றோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பதின் வயதினரை சட்டென உணர்ச்சி பூர்வமான முடிவுக்குள் தள்ளி விடுகின்றன. தனக்குத் தண்டனை தந்த பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உணர்வு நிலை உந்துதல் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

மூன்றாவதாக சகவயதினரின் கேலி, கிண்டல், படிப்பில் ஏற்படும் தோல்வி, இயலாமை என சிறி சிறு பலவீனங்களின் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

நான்காவதாக, மரணத்துக்குப் பின் வாழ்க்கையில் ஏதோ மிக மிக அதிக சந்தோசமும், சுவர்க்கமும் இருக்கின்றன எனும் நம்பிக்கை. என்னதான் இருக்கிறது என்பதை அறிய வேண்டுமே எனும் ஆவல். பதின் வயதினரின் ஆர்வக் கோளாறு தற்கொலைக்குத் தூண்டுகிறது.

இந்த இணைய தளங்களில் சென்று தற்கொலை செய்வதாக சொன்னால் மனம் மாற வாய்ப்பே தராமல் கூடவே நின்று சாவதை உறுதி செய்து விடுகின்றனர். குறிப்பாக குழுவினராக தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இடையில் விட்டு விலக வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் மற்ற தற்கொலை விரும்பிகளின் கட்டாயம்!

கடந்த முப்பது வருடங்களில் இந்த தற்கொலை விகிதம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரஷ்ய இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.

நவீனயுகம் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது, அவை நன்மையின் பாதையிலும், தீமையும் பாதையிலும் தடங்களைப் பதித்துக் கொண்டே செல்கிறது. தண்ணீர் விடுத்து பாலை எடுக்கும் சங்க கால அன்னப் பறவை போல தீமை விடுத்து நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.

பதின் வயதுப் பருவம் என்பது மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனையைப் போன்றது. அது சரியான திசையில் குதிப்பதும், குதிக்காததும் குடும்பத்தினரின் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பொறுத்தது.

( இந்த வாரம் களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

16 மறுமொழிகள்

  1. jaisankarj(சங்கர்) சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 11:22 மு.பகல்

    உலகம் உருப்புடாது

  2. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 11:50 மு.பகல்

    அட… என்ன இப்படி சட்டுன்னு சொல்லிட்டீங்க… :(

  3. top10shares சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 1:19 பிற்பகல்

    எங்கே செல்லும் இந்த உலகம்…..

  4. ஏப்ரல் 28, 2008 இல் 1:31 பிற்பகல்

    சேவியர் ஸார்..

    நானும் இப்படியொரு இடத்தைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.

    எல்லாத்தையும் சொல்லிப்புட்டு அட்ரஸை சொல்லாம விட்டுப்புட்டடீங்களே.. இது நியாயமா..?

  5. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 1:50 பிற்பகல்

    //எங்கே செல்லும் இந்த உலகம்…..//

    இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அங்கம் தான் எப்போதுமே. இணையத்தில் நிகழ்வதால் சட்டென்று உலகத்துக்குத் தெரிந்து விடுகிறது. அவ்வளவு தான். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சைனீஸ் படம் பார்த்தேன் சூயிசைட் கிளப் என்று. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

  6. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 1:50 பிற்பகல்

    //சேவியர் ஸார்..

    நானும் இப்படியொரு இடத்தைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.

    எல்லாத்தையும் சொல்லிப்புட்டு அட்ரஸை சொல்லாம விட்டுப்புட்டடீங்களே.. இது நியாயமா..?
    //

    உண்மைத் தமிழன் ! என்னோட தளத்தைப் பார்வையிட்டதுக்கு அப்புறம் அப்படி ஒரு தற்கொலை எண்ணம் வந்ததா என்பதைத் தெரியப்படுத்தவும். :)

  7. vijaygopalswami சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 12:02 மு.பகல்

    உலகம் சத்தியமா உருப்புடாது!!!

  8. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 9:55 மு.பகல்

    ம்ம்ம்… குரூப் சேர்ந்துடுவீங்களே :)

  9. kunthavai சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 11:14 மு.பகல்

    இந்த மாதிரி (சுயநலவாதிகளை) மனிதர்களை ஹெய்தியில் கொண்டு விடவேண்டும். அப்போது தெரியும் நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்று.

    நமக்கு நல்ல படிப்பு, செல்வம் எல்லாம் கிடைத்தவுடன் சகிப்புதன்மை, பொறுமை எல்லாம் பழங்கால பொருளாகிவிட்டது . சின்ன விஷயங்களுக்கும் கூப்பாடுபோடுகிறதை விட்டு அறிவோடு சிந்திக்கதெரியாதவர்களின் தலையில் கம்புவைத்து இரண்டு போட்டால் எல்லாம் சரியாகும்.

  10. செப்டம்பர் 11, 2008 இல் 11:09 மு.பகல்

    [...] சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை  இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என… [...]

  11. vijayababu சொன்னது,

    ஏப்ரல் 4, 2009 இல் 8:03 பிற்பகல்

    i am always thinking about suside.

  12. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 5, 2009 இல் 9:57 பிற்பகல்

    //i am always thinking about suside.//

    தற்கொலை பற்றி நினைக்கிறது தப்பில்லை, தற்கொலை பண்ணணும்னு நினைக்கிறது தான் தப்பு..

  13. parthiban சொன்னது,

    மே 15, 2009 இல் 11:23 பிற்பகல்

    hi,im parthiban from chennai.

  14. சேவியர் சொன்னது,

    மே 24, 2009 இல் 8:31 பிற்பகல்

    /hi,im parthiban from chennai.//

    நன்றி பார்த்திபன், வருகைக்கு.

  15. nathan சொன்னது,

    ஜூன் 16, 2009 இல் 10:10 பிற்பகல்

    dear sir / madam,
    please tips of Attand suicide.

  16. K.SIVA(Fr) சொன்னது,

    ஜூன் 19, 2009 இல் 8:23 பிற்பகல்

    Tharkoolai Virumpi, Taranijil Iruppin, Avankoolai Tannaal,Adaium Laapam, Ennenru KEdpiir, Mmraan Thanai, Koonridal Poolee,Anaithuk Kudumpamum,Aththudan Palippeyarar, Nilaiyaajii Koodukkum, Uravuth Thurooki Avanee Enpeen, Vaalath Theriyaa muddaail, Vasaiyai Valarththal Muraiyoo??, Avanee Manithan Enraail, Yaarum Virumpa Maaddaair, Unmai Manithan Nenraallunarvaan, Tharkkoolai Ennpathu Koolaijee,Piraraik Koolvathu moonru, Avanthannaik Koolvathumoonree, Koolaiku Avnee Thalaivan Ivaneekoolaith Thalaivan.” KOOLAITH THALAVAN”-K.SIVA-(Fr)


மறுமொழியொன்றை வழங்குக